Friday, December 16, 2011

தேடுகிறேன்...











தேடுகிறேன்..

நீளும் இரவுகளில்..
குறுகிய என் தூக்கத்தில்...
மனதின் ஓரத்தில்...

ஒற்றை வெளிச்சப் புள்ளியாய்
முகவரி தொலைத்த
உன் முக வரியை...

விரைய விரைய விரையமாகும்
முடிவில்லாப் பயணத்தின் முடிவாய்
உன் நினைவுகளை...

கானல் நீராய்
கண்ணாமூச்சி ஆட்டமாய்...

எரியும் இதயத்தில்..
குளிரும் ரத்தத்தில்...
உருகும் உள்ளத்தில்...
தூக்கம் தொலைத்த இமைகளின் ஓரத்தில்...
எங்கேனும் சற்றே இருந்துவிட்டுப் போ...
தனித்த என் தனிமைக்கு துனையாக...

No comments: