
உன் பிரிவு என்னுள் எந்தவித
துயரத்தையோ சோகத்தையோ
ஏற்படுத்தவில்லை...
என் கண்களில் நீர் பூத்து உதிரவில்லை
மனம் குழம்பித் தவிக்கவில்லை
இதயம் உடைந்து நொறுங்கவில்லை...
உன் பிரிவு என்னுள் ஏற்படுத்தியது
ஒரு வெற்றிடம்
இனி யாரும்...
மறுபடி உன்னாலேயுமே கூட
நிரப்ப முடியாத...
என் உயிரின் கடைசிச் சொட்டுகளை
மரணம் உறிஞ்சி முடிக்கும்
வரைக்குமான ஒரு வெற்றிடம்...
No comments:
Post a Comment