
நீ தோளில் சூடும் மாலைக்காக
என் உதட்டுப் புன்னகையை
பறித்துச் செல்கிறாய்...
என் வானத்து இரவில்
நட்சத்திரங்களாய் உன் ஞாபகம்
பிரிவாய் இத்தேய்பிறை...

நிலத்தில் கோலமிட
முயன்ற வானம்
மழைப் புள்ளிகளை
நிரப்பியது போல
என் நினைவுப் புள்ளிகளை
உன் நெஞ்சில் விதைத்தேன்...
இழைகள் இழுக்க இடமின்றி
தேங்கிவிட்ட நீரைப் போல
காதல் முளைக்க வழியின்றி
வெறுப்பு உரம் தூவிச் செல்கிறாய்..
1 comment:
chanceless hema... wat a word u r using in yr poem. really fantastic...!
Post a Comment