
நான் செய்யும் தவமெல்லாம்
வரமாகி உனைச் சேர்கிறது
கவிதைகளாக
காதல் தோட்டத்தில்
என் கண்ணீர் குடித்த
உன் வேர்கள்
காயப் பூக்களை பரிசளிக்கிறது...
என் நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
நீ வெளிப்படுத்த
கண்ணீராகவோ அல்லது
புன்னகையாகவோ...
என் கண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
உன் வாழ்வில் சில
வர்ணங்கள் குழைக்க
என் புன்னகையை பொத்தி வைத்துக்கொள்
என்றேனும் தேவைப்படும்
என் பிரிவு உனைச் சுடுகையில்
ஒத்தடம் கொடுக்க...
உனக்கு பரிசளிக்கவென்றே
ஒவ்வொரு கவிதையையும்
செதுக்குகிறேன்
காகிதத்தில் பூக்களாக...
அத்தனையும் காகிதப் பூக்களாய் மட்டும்
நீ பார்ப்பதால்
உன் முன் அறையிலேயே
உதிர்ந்து போய்விடுகின்றன
தற்கொலைக்கு தூண்டப்பட்டு...
1 comment:
i cant control my tears... wat a poem hema...! wow...! right wordings in right lines... excellent...!
Post a Comment