Tuesday, May 3, 2011

தேடல்....


இதுவே என் கடைசி கடிதம்
என்று உனை திட்டி நான் எழுதும்
கடிதங்கள் இன்னும் தொடர்கதையாய்....

ஒவ்வொரு முறை உனை மறக்க
எத்தனிக்கும் போதும் கடைசியாய்
ஒரு முறை என்று நினைத்த நினைவுகள்
இன்னும் மறக்க முடியாமல்.....

நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
காத்திருக்க, ஓடிய நாட்கள்
இன்னும் எழுதப்படாத கவிதைகளாய்....

உன்னிடம் திட்டு வாங்க வேண்டும்
என்பதற்காகவே உனைத் திட்டி
வாங்கிக் கொண்ட வைர வரிகள்
குத்தாத முள்ளாய் இன்னும் என் நெஞ்சில்.....

உன் கேள்விக்கு பதில் என்னிடமும்
என் கேள்விக்கு பதில் உன்னிடமும்
இருந்தும் விடை தெரியாத புதிராய்
இன்னும் தொடர்கிறது நம் தேடல்....

No comments: