
பிரித்த புத்தகத்தில் வாடிய பூப் போல
உன் ஞாபகம்...
என் தோட்டத்தின்
கண்ணீர் மது ஏந்தி மலர்ந்த
காயப் பூக்களில் காதல் மணம் மட்டும்
காற்றின் அலைகளில் உன் மனம் தேடி...
உன் கண்கள்
என் இமைகளாக இருக்கும் போது
உறங்கவும் முடியவில்லை
விழிக்கவும் பிடிக்கவில்லை...
மௌனம் சங்கமத்தின்
மொழி என்றால்
உன் மௌனம் ஏன் என்னுள்
முகாரி இசைக்கின்றது?!....
No comments:
Post a Comment