Saturday, May 14, 2011

தீ வடித்த தேன் துளிகள்....








உன் காதல் என்ற ஒற்றை பூ தாங்க
எத்தனை முட்களை என் இதயம்
ஏற்கத் தயாராகிவிடுகிறது!...

உன் முத்தப் பரல்களால்
நிரம்பியிருந்த என் கொலுசுகள்
இன்று கண்ணீர் பரல்களாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது...

நீ பிரிதலை உரைத்த நிமிடத்திலிருந்து
என் நொடிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன
அக்னிக் குழம்பாக....

முத்தமிட்ட உதடுகள் உலரும் முன்னே
தீ வடித்த தேனை ஏன்
தடவிச் செல்கிறாய்?!....

No comments: