
என் மூடிய புத்தகத்தில்
பதித்து வைத்த
பன்னீர் பூ நீ
வாடியிருந்தும்
வாசனை பரப்புகிறாய்
மனதினுள்....
ஒரு துளியாய்
தேன் துளியாய்
என்றோ உயிரினுள் விழுந்தாய்
தாகம் தனிகி்றது
இன்று எனக்கு....
என் வெள்ளைப் பக்கங்களின்
கருப்பு கவிதைகள் நீ......
என் கொலுசில் உதிராமல் இருக்கும்
ஒற்றை முத்தில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
இன்னமும்
உன் முத்தத்தின் ஈரம்...
நீ விட்டுச் சென்ற நிழலும்
வெட்டிச் சென்ற நினைவும்
நெஞ்சினுள் காயாத ஈரமாய்....
சுடும் அக்னிச் சரமாய்.....
No comments:
Post a Comment