
யார் சொன்னது மௌனம் சப்தமற்றது என?
யார் சொன்னது மௌனம் சொற்களற்றது என?
யார் சொன்னது மௌனம் நிசப்தமானது என?
சொல்ல முடியாத வார்த்தைகளைத்
தேக்கி நிற்கும்
மௌனம் ஒரு பேரிரைச்சல்..
மௌனம் ஒரு மோன தவம்
மௌனம் ஒரு குழப்பம்
மௌனம் ஒரு தெளிவு
மௌனம் ஒரு புதிர்
மௌனம் ஒரு தயக்கம்
மௌனம் ஒரு இறுக்கம்
மௌனம் ஒரு இறுமாப்பு
மௌனம் ஒரு பணிவு
மௌனம் ஒரு தேவநிலை
மௌனம் ஒரு ராட்சசம்
மௌனம் ஒரு கரைதல்
மௌனம் ஒரு கரைத்தல்
மௌனம் ஒரு முரண்
மௌனம் ஒரு எதிர்ப்பு
இனி யாராவது மௌனமாயிருந்தால்
சம்மதம் என அர்த்தம் கொள்ளாதீர்..
சொற்களின் அதிர்வுகளை விட
மௌனத்தின் அதிர்வுகள் வீரியமானவை...
சில நேரம்
மௌனத்தின் சப்தங்களில்
பூகம்பமும் வெடிக்கலாம்
பூக்களும் மலரலாம்...
யார் சொன்னது மௌனம் சப்தமற்றது என?...
2 comments:
-------------------
what a silent comment? Understood. Thanks Anu.
Post a Comment